sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

மன்னிக்க மாட்டாயா...

/

மன்னிக்க மாட்டாயா...

மன்னிக்க மாட்டாயா...

மன்னிக்க மாட்டாயா...


ADDED : மார் 01, 2024 02:24 PM

Google News

ADDED : மார் 01, 2024 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்குச் செல்ல ஆட்டோவை அழைத்தாள் தமிழ் ஆசிரியை ஜெலினா. தாமதமாகச் சென்றால் தலைமை ஆசிரியை திட்டுவார் என பதட்டம் அவளின் கண்ணில் தெரிந்தது.

வழியில் காயத்துடன் நின்ற முதியவர் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக ஆட்டோவை மறித்தார். ஆனால் ஜெலினா பொருட்படுத்தவில்லை. பின்னர் சிக்னலில் குழந்தையுடன் நின்ற பெண் உதவி கேட்டும் கவனிக்காத மாதிரி திரும்பிக் கொண்டாள். பள்ளிக்கு வந்து சேர்ந்தாள். ஆனால் அன்று தலைமை ஆசிரியை விடுப்பில் இருந்ததால் வரவில்லை. வகுப்பிற்குள் நுழைந்தாள்.

ரட்சண்ய யாத்ரிகம் நுாலில் இருந்து, ''தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பலபாடு படும் போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகிலார் தாம் செய்வதிவர் பிழையை மன்னியும் என்றெழிற் கனிவாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல்'' என்ற பாடலை மாணவர்களுக்கு சொல்லி விளக்கம் அளித்தாள். (இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பாவிகளை மன்னிக்கும் விதத்தில் அமைந்த பாடல் இது) அப்போது முதியவரும், உதவி கேட்ட பெண்ணும் அவளின் கண் முன்னே வந்தனர். செய்த தவறுக்காக வருந்தினாள்.






      Dinamalar
      Follow us