ADDED : செப் 28, 2022 02:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாக்குவாதம் வேண்டாம். மீறினால் புத்தி தடுமாறும்.
* நல்ல குணம் கொண்டவர்களால் சுற்றத்தினர் மட்டுமல்ல, பூமியும் பாக்கியத்தை சேர்த்துக் கொள்கிறது.
* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும்.
* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் துன்பம் இதயத்தை வலிமையாக்குகிறது.
* முட்டாள் தான் எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான்.
* மவுனமாயிருந்தால் முட்டாள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்.
* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.
- பொன்மொழிகள்

