ADDED : பிப் 20, 2023 10:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்களை பார்த்து முடியாது என ஒருவர் சொன்னால் அச்செயலை முடிக்கும் வல்லமையை தாரும் என வேண்டுங்கள்.
* விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.
* ஜெபித்தவன் மறந்தாலும் ஜெபத்தை கேட்டவர் மறப்பதில்லை.
* எதிர்பார்த்த வாசல்களை மனிதர்கள் அடைக்கும்போது மற்றொரு வாசல் திறக்கும்.
* அன்பினால் செய்யும் நன்மை எல்லாவற்றையும் விட நன்மையானது.
* பொய்யும், பொய் சாட்சியும் சொல்லாதீர்கள்.
* பிறர் பொருள் மீது இச்சை கொள்ளாதீர். உங்களுக்கானது உங்களை வந்தடையும்.
-பைபிள்

