* பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்.
* பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு அனைத்தையும் மன்னிக்கும்.
* பேசுபவர்கள் செயலாற்ற முடியாது. குறைந்த சொற்கள் அதிக லாபம் தரும்.
* தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவதே மேல்.
* கர்வத்தால் அறிவு வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும்.
* கடவுளின் கருணையை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது.
* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை.
* முட்டாளின் பாட்டை விட அறிவாளியின் நிந்தனை சிறந்தது.
* கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.
* தேனாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் திகட்டி விடும்.
* இனிய சொற்கள் மனதிற்கும், உடம்புக்கும் நலம் தரும்.
* நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறக்காதீர்கள்.
* தர்மம் செய்வதை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள்.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள். சபிக்க வேண்டாம்.

