* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள்.
* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் துன்பம் இதயத்தை வலிமையாக்குகிறது.
* முட்டாள் எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான். புத்திசாலி விலகியே இருப்பான்.
* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.
* புற்றை உடைப்பவர் பாம்பால் கடிபடுவது போல, பிறருக்காக படுகுழி தோண்டுபர் அந்தக் குழிக்குள் விழுவார்.
* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனம்.
* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் ஏதுமில்லை.
* சுதந்திரமாக இருக்க விரும்பினால் உண்மையைப் பேசுங்கள். புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான்.
* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும்.
ஆலோசனைக்கு செவி கொடுப்பவனே வெற்றி பெறுவான்.
- பொன்மொழிகள்

