நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணக்காரர் ஒருவர் போதகரை தேடிச் சென்றார். ''தேவைக்கும் அதிகமாக பணம் என்னிடம் உள்ளது. ஆனால் யாரும் என்னை மதிப்பதில்லை. பிறர் பாராட்டும்படி வாழ விரும்புகிறேன். வழிகாட்டுங்கள்'' எனக் கேட்டார்.
* நல்லதையே நினை.
* இனிமையுடன் பேசு.
* மற்றவருக்கு உதவு.
* கோபத்தை கைவிடு.
* பிறரை அன்பாக நடத்து.
பாராட்டு தேடி வரும் என்றார் போதகர். கடைப்பிடித்த பணக்காரர் பின்னாளில் மக்கள் போற்றும் நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தார்.