நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி ஒருவன் தன் வாத்துகளை இனம் பிரிக்க சிவப்பு, பச்சை, நீலம் என பல வண்ணங்ளைத் தீட்டினான். ஒரு பிரிவு வாத்துகள் இன்னொரு பிரிவிடம் செல்ல முடியாதபடி வேலியிட்டான். ஒன்றுக்கொன்று பழக முடியாமல் அவை வருத்தப்பட்டன. ஒருநாள் பேய் மழை. மழையில் நனைந்த வாத்துக்கள் நீரில் நீந்தி விளையாடின. வண்ணம் நீரில் கரைந்ததால் எல்லாம் வெண்ணிற வாத்துகளாக மாறின.
இப்படித் தான் மனிதனின் நிலையும் இருக்கிறது. ஓரிடத்தில் வசிக்கும் மக்கள் கூட இனம், மொழி, மதம் என பிரிவினையால் தவிக்கின்றனர். அனைவரும் சமம் என்பதை உணர்ந்தால் மனிதர்கள் அன்பால் இணைந்திடுவர். அப்போது நட்புணர்வுடன் பழகுவர். ''சகோதரர்கள் ஒருமித்து ஒருமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது என்பதை உணருங்கள்''