நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பின்வரும் கற்பனையை சிந்தித்தால் உங்களுக்கு ஒரு உண்மை புரியும்.
வாடிக்கையாளர் ஒருவரிடம், '' உங்கள் கணக்கில் தினமும் ஒரு தொகை வரவு வைக்கப்படும். விதிமுறைக்கு ஏற்ப அதை செலவழிக்கலாம்'' என்றார் வங்கியின் மேலாளர்.
* வரவு வைக்கும் பணத்தை அன்றாடம் செலவழிக்காவிட்டால் அது பற்று வைக்கப்படும்.
* வேறொருவர் கணக்கிற்கும் உங்கள் பணத்தை மாற்ற முடியாது.
* முன் அறிவிப்பு இன்றி எப்போது வேண்டுமானாலும் கணக்கு ரத்து செய்யப்படும்.
இந்த அடிப்படையில் தான் 'காலம்' என்ற
சக்தி இயக்குகிறது. மனிதனின் கணக்கில்
தினமும் 24 மணி நேரம் வரவாகிறது. அதை
நல்ல செயலுக்கு பயன்படுத்தாவிட்டால் உங்கள் வாழ்க்கை வீணாகும்.