sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஆக 09, 2024 07:42 AM

Google News

ADDED : ஆக 09, 2024 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.யாழினி, கமலாநகர், டில்லி.

*மகாலட்சுமிக்கு உரிய நேரம்...

@விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடும் நேரம் மாலை. அந்நேரத்தில் சாப்பிடுதல், துாங்குதல் கெட்ட செயல்களில் ஈடுபடுதல் கூடாது. இந்நேரத்தில் வழிபடுவதை தவிர மற்றவற்றில் ஈடுபடுவது பாவம்.

க.மகேஷ், திருமங்கலம், மதுரை.

*குழந்தைக்கு முதலில் தாய்வழி குலதெய்வத்திற்கு முடி எடுக்கலாமா...

தந்தைவழி குலதெய்வத்திற்கு பின்னரே தாய்வழி குலதெய்வத்திற்கு முடி எடுக்கலாம்.

த.தேவராஜ், பேரூர், கோயம்புத்துார்.

*கோயிலில் கண்டாமணி (பெரியமணி) ஒலிப்பது ஏன்?

கடவுளை சிந்திக்காமல் வேண்டாத விஷயங்களில் மூழ்கியவர்களை எழுப்புவதே இதன் நோக்கம்.

மு.சிவநாதன், பசவன்குடி, பெங்களூரு.

*போனில் சத்தமாக பேசுகிறார்களே....

மற்றவரின் கவனத்தை ஈர்த்தல், தாழ்வு மனப்பான்மை, கேட்பதில் குறைபாடு இதில் ஏதேனும் ஒன்றே காரணம்.

கு.பார்த்தசாரதி, வில்லியனுார், புதுச்சேரி.

*ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகளை என்ன செய்யலாம்?

பூஜையறையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டால் ராம நாம வங்கிக்கு அனுப்புங்கள்.

மா.திவ்யா, நாகர்கோவில், கன்னியாகுமரி.

*மனிதப் பிறவியின் நோக்கம் என்ன?

கடவுளை உணர்தல், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்தல்.

வ.ரித்தேஷ், புரசைவாக்கம், சென்னை.

*சன்னதிக்குள் ஒருவரை ஒருவர் மோதியபடி செல்வது சரியா?

நாகரீகம் கொண்டவர்கள் மனிதர்கள். சன்னதிக்குச் செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு வழிவிட்டு வரிசையில் நின்று தரிசிக்கலாமே...

கு.வெங்கடேஷ், பழநி, திண்டுக்கல்.

*கலியுகம் முற்றினால் என்னாகும்

நல்லவர்கள் துன்பத்திற்கு ஆளாவர். மக்கள் கடமையை மறப்பர். இயற்கை சீற்றம் அதிகரிக்கும்.

அ.வைரவன், புளியரை, தென்காசி.

*வீட்டில் இருந்து மூன்று பேராக வெளியே செல்லக் கூடாதா...

சுபவிஷயமாக இருந்தால் மூன்று பேர் வேண்டாம். மற்றபடி தவறில்லை.






      Dinamalar
      Follow us