
கே.பாஸ்கரன், கரோல்பாக், டில்லி.
*மகாபுருஷர் யார்?
போரின் போது ஆயுதத்தை இழந்தார் ராவணன். எதிரியான அவரிடம் இரக்கப்பட்டு 'இன்று போய் நாளை வா' என சொன்னார் மகாபுருஷரான ஸ்ரீராமர்.
வி.ரஜினி, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*பக்தனின் குணம் என்ன?
துாய்மையான மனம், ஒழுக்கம்.
பி.பத்மா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.
*தனியாக அல்லது தம்பதியாக விரதமிருத்தல் - எதற்கு பலன் அதிகம்?
பலன் ஒன்றே. தம்பதியாக விரதமிருப்பது விசேஷம்.
எம்.சுவேதா, குற்றாலம், தென்காசி.
*பிறந்த நட்சத்திரம் இரண்டு நாள் இருந்தால் எந்த நாளில் கொண்டாட வேண்டும்?
சூரிய உதயத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் உங்கள் நட்சத்திரம் இருந்தால் அந்த நாளே பிறந்தநாள்.
ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.
*மரணத்தை கண்டு பயப்படாதவர் யார்?
துறவிகள். ஏனெனில் பிறவியை விட்டு விலகி கடவுளை உணர்ந்தவர்கள் அவர்கள்.
தி.லோகநாதன், தோப்பூர், மதுரை
*எந்த மூலையில் போர்வெல் தோண்டலாம்?
வடகிழக்கு (ஈசான்யம்) மூலையில் தோண்டுவது நல்லது. முடியாத போது வடமேற்கு (வாயு) மூலையில் தோண்டலாம்.
பா.மணிவண்ணன், எழும்பூர், சென்னை.
*ராகு, எமகண்டத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே...
ராகு, கேது அசுர கிரகங்கள் என்பதால் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.
அ.மாயூரா, ஹலசூரு, பெங்களூரு.
*இந்திரியம் என்றால் என்ன?
கண், காது, மூக்கு, வாய், மெய்(உடம்பு) ஆகியவை இந்திரியம்.
வி.ரம்யா, ஆண்டிப்பட்டி, தேனி.
*அரச மரத்தை வழிபடுவது ஏன்?
மகாவிஷ்ணுவின் அம்சம் அரசமரம். இதைச் சுற்றுவதும், இங்கு தியானம் இருப்பதும் நல்லது. இதனால் மனபலம் அதிகரிக்கும்.