sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 09, 2024 01:10 PM

Google News

ADDED : அக் 09, 2024 01:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.ஸ்ரீநிதி, மேலுார், மதுரை.

*புத்தகம் காலில் மிதிபடலாமா...

மிதிபடக் கூடாது. சரஸ்வதியின் அம்சமான புத்தகம் தவறி விழுந்தாலோ, காலில் பட்டாலோ தொட்டுக் கும்பிடுவது அவசியம்.

வி.சந்தோஷ், மாகடி, பெங்களூரு.

*குழந்தைகள் படிப்பில் சிறக்க...

கீழ்க்கண்ட பாடலை படியுங்கள்.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்

கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்

காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

எம்.மித்ரா, வால்பாறை, பொள்ளாச்சி.

*கூத்தனுார் என ஏன் பெயர் வந்தது?

புலவர் ஒட்டக்கூத்தருக்கு இந்த தலத்தில் உள்ள சரஸ்வதி அருள்புரிந்தாள். அதனால் இந்த ஊரை கூத்தனுார் என அழைக்கிறோம்.

பி.ஹரிணி, இலஞ்சி, தென்காசி.

*விஜயதசமியை கொண்டாடுவது ஏன்?

அசுரர்களான ராவணன், மகிஷாசுரனை நவராத்திரியின்போது ராமரும், துர்கையும் அழித்தனர். வெற்றிக்குரிய இந்நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.

கே.அருண், கீர்த்திநகர், டில்லி.

*விஜயதசமிக்கும், வன்னி மரத்திற்கும் தொடர்பு உண்டா?

போரில் வெற்றி பெற இம்மரத்தின் அடியில் ஆயுதங்களை வைத்து வழிபடுவர். கோயிலில் விஜயதசமியன்று வன்னிமர பூஜை நடக்கிறது.

எல்.சிவரஞ்சனி, திருப்போரூர், செங்கல்பட்டு.

*தட்சிணாமூர்த்தியை வழிபட்டால்...

கல்வி வளர்ச்சி உண்டாகும். நல்ல புத்தி, ஞானம் உண்டாகும்.

எஸ்.ரமணி, கம்பம், தேனி.

*மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க...

சரஸ்வதியின் அருளைப் பெற குமரகுருபரர் பாடியது சகலகலாவல்லிமாலை. இதை தினமும் படியுங்கள்.

அ.ஆதித்யா, அருமனை, கன்னியாகுமரி.

*சரஸ்வதி ஏன் வெள்ளை ஆடை அணிகிறாள்?

கள்ளம், கபடமின்மை, அறிவு, மனத்துாய்மையின் அடையாளம் வெள்ளை.

கே.பூமிகா, திருமாணிகுழி, கடலுார்.

*சரஸ்வதியின் பெயர்களை கூறுங்கள்.

பாரதி, வாணி, சகலகலாவல்லி, வாக்தேவி, கலைமகள், மேதாதேவி, ஹம்சவாகினி, நாமகள்






      Dinamalar
      Follow us