sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : நவ 28, 2024 01:07 PM

Google News

ADDED : நவ 28, 2024 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.பரமசிவன், கரோல்பார்க், டில்லி: *புகழுடன் வாழ...

உழைப்பு, நேர்மை, தர்மம் போதுமே.

எஸ். வினித் ஹலசூரு, பெங்களூரு: *எட்டெழுத்து மந்திரம் என்றால்...

'ஓம் நமோ நாராயணாய'. இந்த ரகசிய மந்திரத்தை முதலில் சொன்னவர் ராமானுஜர்.

கே.ராதா, நயினார்குறிச்சி, கன்னியாகுமரி: *சங்கநிதி, பதுமநிதி யாருடையது?

குபேரனிடம் உள்ளது ஒன்பது நிதி. அதில் முதலிடம் சங்கநிதி, பதுமநிதி.

ம.ஆதித்யா, கோடம்பாக்கம், சென்னை: *பிறர் சாப்பிடுவதைப் பார்த்தால்...

ஏக்கம், பொறாமையுடன் சாப்பிடுவதைப் பார்த்தால் தோஷம் வரும்.

ப.விஜயா, நிலக்கோட்டை, திண்டுக்கல்: *கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். பரிகாரம் உண்டா...

செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு பால் அபிேஷகம் செய்யுங்கள்.

ஜி.கிருஷ்ணன், சங்கரன்கோவில், தென்காசி: *அறுமுகச் சிவன் என்றால் யார்?

சிவபெருமானிடம் இருந்து தோன்றியதால் முருகனுக்கு இப்பெயர் வந்தது.

வி.பவித்ரன், அலகுமலை,திருப்பூர்: *விளக்கு பூஜையில் ஆண்கள் பங்கு பெறலாமா...

வழிபாடு பொதுவானது. நீங்களும் பங்கு பெறலாம்.

சி.முகுந்தன், மேலுார், மதுரை: *பெண்கள் மஞ்சள் பூசுவது ஏன்?

மங்கலத்தின் அடையாளம் மஞ்சள். இது கிருமி நாசினியும் கூட.

சி.முருகன், வில்லியனுார், புதுச்சேரி: *யாருக்கு இடையே செல்வது கூடாது?

1. கணவன், மனைவி

2. குரு, சீடன்

3. பசு, கன்றுக்கு இடையே செல்வது கூடாது.






      Dinamalar
      Follow us