sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 12, 2025 11:01 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 சா.கிஷோர், சக்குர்பூர், டில்லி: கனவில் யானை துரத்தினால்...

விநாயகருக்கு நேர்த்திக்கடன் பாக்கி இருந்தால் இப்படி கனவு வரும்.

சொ.மீனாட்சி, அலங்காநல்லுார், மதுரை: நேர்த்திக்கடன், பரிகார பூஜை - ஒரே நாளில் செய்யலாமா?

முதலில் நேர்த்திக்கடன், மற்றொரு நாளில் பரிகார பூஜையை செய்யுங்கள்.

யு.ஆனந்தி, திப்பசந்திரா, பெங்களூரு: ஆஸ்துமா தீர எந்தக் கோயிலுக்கு செல்லலாம்?

காற்று தலமான காளஹஸ்திக்கு செல்லுங்கள்.

எம்.திவ்யா, மாடப்பாக்கம், சென்னை: இறந்த சுமங்கலியின் தாலியை என்ன செய்யலாம்?

பூஜையில் வைத்து சுவாசினி தேவதையாக வழிபடலாம். மகன்கள் மோதிரமாக அணியலாம்.

வி.முருகன், தாடிக்கொம்பு, திண்டுக்கல்: தினமும் நவக்கிரகத்தை வழிபடணுமா...

தினமும் நவக்கிரகத்தை வழிபட்டால் தெய்வ அருள் தடையின்றி கிடைக்கும்.

பொ.மாரி, உக்கிரன்கோட்டை, திருநெல்வேலி: விரத நாளில் மண் பானையில் சமைக்கலாமா...

வேண்டிக் கொண்டால் அப்படி சமைக்கலாம்.

மா.குமரன், தாராபுரம், திருப்பூர்: வடக்கு நோக்கி படுக்கலாமா...

வடக்கில் ஈர்ப்பு விசை அதிகம் என்பதால் மூளை பாதிக்கும். மற்ற திசையில் படுங்கள்.

அ.சிவா, கல்குளம், கன்னியாகுமரி: நவாவரண பூஜையை எந்த தெய்வத்திற்கு நடத்துவர்?

ராஜேஸ்வரி, துர்கை அம்மனுக்கு பவுர்ணமி அன்று நடத்துவர்.

இ.ராஜன், வில்லியனுார், புதுச்சேரி: அம்பு படுக்கையில் பீஷ்மர் காத்திருந்தது ஏன்?

உத்ராயண புண்ணிய காலமான தை மாதத்தில் உயிர் விட்டால் நல்லது என்பதால்.






      Dinamalar
      Follow us