sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 11, 2025 07:58 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 07:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சா.சஞ்சனா, வண்டலுார், காஞ்சிபுரம்: கந்தசஷ்டி கவசம் என்றால்...

போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது.

சொ.மீனாட்சி, திருமங்கலம், மதுரை: குழப்பம், பிரச்னை போக்கும் சிவத்தலத்தை சொல்லுங்கள்.

மதுரை, திருவண்ணாமலை

வி.பகவதி, குமாரபுரம், கன்னியாகுமரி: மந்திரங்களை தினமும் எத்தனை முறை ஜபிக்கலாம்?

ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம்.

ஆர்.கோவிந்த், பாகூர், புதுச்சேரி: கண் நோய் தீர...

திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள்.

பி.நித்தியா, கோயம்புத்துார்: வழக்கில் உள்ள பரம்பரை சொத்து கிடைக்க...

சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள்.

யா.பரத், உடன்குடி, துாத்துக்குடி: அடிக்கடி கனவில் யானை பிளிறுகிறது. நல்லதா...

நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுங்கள்.

சிவ.குருநாதன், உத்தமபாளையம், தேனி: மனைவி கர்ப்பமாக இருக்கும் போது என் முதல் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தலாமா?

செலுத்தலாம்.

மு.ராம்சரண், நந்திமலை, பெங்களூரு: சிவன் கோயிலில் முப்பழ அபிஷேகம் எப்போது நடக்கும்?

ஆனி பவுர்ணமியன்று மா, பலா, வாழைப்பழ(முப்பழம்) அபிஷேகம் சிவனுக்கு நடக்கும். இதை தரிசிப்பவருக்கு கேட்ட வரம் கிடைக்கும்.

எம்.பார்வதி, எழும்பூர், சென்னை: மரணத்திற்கு பின் மனிதனை தொடர்வது எது?

புண்ணியம், பாவம்.






      Dinamalar
      Follow us