
என்.சம்பத், ராமாபுரம், சென்னை: 2026 எப்படி...
1.1.2026 (1+1+2+0+2+6=12) இதன் கூட்டுத்தொகை '3'. இது குருவின் எண் (வருடம்) என்பதால், நாம் நினைத்ததை அவர் நிறைவேற்றுவார்.
ம.அன்புச்செல்வன், வீரபாண்டி, தேனி: விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தலாமா?
சாத்தக் கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.
அ.விஜயலட்சுமி, செல்வபுரம், கோயம்புத்துார்: சொர்ண தானம் செய்ய ஏற்ற நாள்...
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது.
ஜி.ரகுநாதன், ஆதனுார், காஞ்சிபுரம்: எதிரியாக இருப்பவர் வீடுதேடி வந்தால்...
வந்தவர் யாராக இருந்தாலும் புன்சிரிப்புடன் வரவேற்பது நம் கடமை.
டி.ராஜாராம், பொட்டல்குளம், கன்னியாகுமரி: கற்றாழைச் செடியை வாசலில் கட்டலாமா...
திருஷ்டி போக்கவும், விஷப் பூச்சிகளை தடுக்கவும் கட்டலாம்.
எஸ்.ஜீவானந்தம், பசுமலை, மதுரை: வீட்டிலுள்ள அரச மரத்தை வெட்டலாமா?
சுற்றியுள்ள வீடுகளை மரத்தின் வேர் பாதிக்கும். அதனால் வெட்டுங்கள்.
பி.கனகராஜ், கோரம்பள்ளம், துாத்துக்குடி: ஒரு உயிர் பிரியும் போது மற்றவர் சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
சிவ சிவ
ராம ராம
இதில் ஒன்றை தொடர்ந்து சொல்லுங்கள்.
வெ.கரிகாலன், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி: அமாவாசை அன்று ஒருவர் இறந்தால்...
தேய்பிறை தோஷ பரிகாரம் செய்ய வேண்டும். பின் வழக்கமான சடங்குகளை செய்யலாம்.
வா.சர்மிளா, இந்தர்புரி, டில்லி: பாவம் என்பது...
பொய், பேராசை, மது, திருட்டு, கொலை

