தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 18, 2026 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி.கோபால், பைம்பொழில், தென்காசி: விரத நாளில் உப்பு சேர்க்கலாமா...

கூடாது. காமம், உணர்ச்சி, கோபத்தை உப்பு துாண்டும். எப்போதும் உப்பை குறைவாக சேருங்கள்.

தாரணி அமராபரன், மதுரை: பள்ளியறை பூஜையில் அம்மனுக்கு வெண்பட்டு சாத்துவது ஏன்?

துாய்மை, அமைதியின் வடிவமாக அம்மன் இருப்பதால் வெண்பட்டு சாத்துகின்றனர்.

ஆ.பிரவீணா, கல்யாண்புரி, டில்லி: கருடனை தரிசனம் செய்தால்...

நன்மை சேரும். பாவம், நாகதோஷம், கர்மதோஷம் தீரும்.



மா.திவ்யஸ்ரீ, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: சாப்பிடும் போது விளக்கை குளிர வைக்கலாமா?

கூடாது. சாப்பிட்ட பின்னரே குளிர வைக்கலாம்.

ரெ.நடராஜர், சிதம்பரம், கடலுார்: நேர்த்திக்கடனாக தங்கக் கொலுசு கொடுக்கலாமா?

கொடுப்பது விசேஷம். ஆனால் இப்போதுள்ள விலையை நினைத்தாலே பயமாக இருக்கு.

மா.முருகன், கணபதிபுரம், கோயம்புத்துார்: கோயிலில் கூழ், பானகம் தானம் செய்தால்...

அம்மன் அருளால் நோய் நீங்கும்.

எம்.பாலமுரளி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: காசிக்கயிறை கையில் கட்டலாமா...

கட்டலாம். திருஷ்டி, வீண் பயம் போகும்.

பு.வனஜா, குளச்சல், கன்னியாகுமரி: தாலிக் கயிற்றில் மூன்று முடிச்சு இடுவது ஏன்?

முடிச்சு 1 - மனம் ஒன்றி வாழ்வர்.

முடிச்சு 2 - தர்மத்தை பின்பற்றுவர்.

முடிச்சு 3 - அன்பாக நடப்பர்.

தா.அறிவழகன், வில்லிவாக்கம், சென்னை: பத்தியம் என்றால்...

நோய்க்காக மருந்துண்ணும் போது கடைபிடிக்கும் வழிமுறை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us