ADDED : ஜூலை 02, 2026 10:16 AM

சாவித்ரி.எம், திருநின்றவூர், திருவள்ளூர்: வேலை கிடைக்க...
முதலில் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் முருகப்பெருமானுக்கு செவ்வாயன்று அரளிப்பூ மாலை சாத்துங்கள்.
சரோஜா.வி, பசவன்குடி, பெங்களூரு: எந்த எண்ணெய்யில் தீபமேற்றலாம்...
நெய்யில் ஏற்றுவது சிறப்பு. இல்லாவிட்டால் நல்லெண்ணெய்யில் ஏற்றுங்கள்.
சச்சு.ஆர், திருநாவலுார், கள்ளக்குறிச்சி: எனக்கு நேர்ந்த பழியை போக்குவது எப்படி?
இந்தப்பழி ஏற்பட்டதற்கான காரணம் உங்களுக்கு தெரியும். இனி அதுபோல் செய்யாதீர்கள். நல்லவனாக மாறுங்கள்.
லட்சுமி.எஸ், நங்கநல்லுார், சென்னை: சுவாமி சன்னதியின் முன் நேராக அமர்ந்து ஜபம் செய்யலாமா...
கூடாது. சன்னதிக்கு பக்கவாட்டில் அல்லது பிரகாரத்தில் ஜபம் செய்யுங்கள்.
நிர்மலா.வே, கல்லல், சிவகங்கை: பவுர்ணமி அன்று எந்த தெய்வத்தை வழிபடலாம்?
எல்லா தெய்வத்தையும் வழிபடலாம். இரவில் வழிபடுவது இன்னும் நல்லது.
பத்மா.ரெ, குளச்சல், கன்னியாகுமரி: பிரதோஷ விரதத்தை தவிர சிவனுக்கு வேறு விரதம் உண்டா?
உண்டு. பிரதோஷ விரதம் விசேஷமானது. திங்கள் அன்றும் விரதமிருக்கலாம்.
விஜயா.ஆர், கோவில்பட்டி, துாத்துக்குடி: நெல்லி மரம் வீட்டில் இருந்தால்...
மகாலட்சுமியின் அம்சம் 'ஸ்ரீ விருட்சம்' (நெல்லி மரம்). இது வீட்டில் இருந்தால் செல்வம் சேரும்.
சுதா.ஜெ, பல்லடம், திருப்பூர்: காசிக்கு செல்பவர்கள் ராமேஸ்வரம் செல்வது கட்டாயமா...
காசியில் இருந்து புறப்பட்டால் ராமேஸ்வரமும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டால் காசிக்கும் செல்ல வேண்டும்.
தேவிகா.டி, உத்தமபாளையம், தேனி: உடைந்த சிலைகளை வைத்து பூஜை செய்யலாமா?
செய்யக்கூடாது. ஆபரணமோ, அலங்காரமோ உடைந்தால் தோஷம் இல்லை.
