sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 01, 2023 08:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2023 08:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.ஜி.ராகவன், துடியலுார், கோவை.

*அஷ்டமத்துச் சனியா...

ஒருவரின் ராசியில் இருந்து எட்டாம் ராசிக்கு சனி வரும் காலம் அஷ்டமத்துச் சனி. இதற்கு பரிகாரமாக திங்கள் தோறும் சிவனுக்கு விரதமிருப்பதும், சனிப் பிரதோஷத்தன்று நந்தி அபிஷேகம் தரிசிப்பதும் நல்லது.

ஆர்.கே.பிரசாத், வி.கே.புரம், திருநெல்வேலி.

*சாஸ்தாவும் ஐயப்பனும் ஒருவரா...

ஒருவரே. கேரளத்தில் பிரம்மசாரியாகவும், தமிழகத்தில் அவரது மனைவியரான பூரணை, புஷ்கலாவுடன் இருக்கிறார்.

ஆர். ராமஜெயம், பெண்ணாடம், கடலுார்.

*ஆண்டுக்கு எத்தனை முறை வீட்டில் ஹோமம் நடத்தலாம்?

எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம். நோயின்றி நீண்ட நாள் வாழவும், செல்வம் பெருகவும் பிறந்த நட்சத்திரத்தன்று ஹோமம் நடத்துங்கள்.

கே.சசிராஜன், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

*சண்டித்தனம் செய்யும் குழந்தையை திருத்துவது எப்படி?

இது குழந்தைக்கே உரிய குணம். நல்லது, கெட்டதை சொல்லிக் கொடுங்கள். 'டிவி', அலைபேசி, சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிக்காமல் குழந்தைக்கு அதிக நேரம் செலவிடுங்கள்.

எஸ்.ராஜி, மயூர்விகார், டில்லி.

*வலம்புரி, இடம்புரி விநாயகர் எப்படியிருப்பார்?

விநாயகரின் தும்பிக்கை வலதுபுறம் இருந்தால் வலம்புரி, இடதுபுறம் இருந்தால் இடம்புரி.

கே.பிரீதி, மாகடி, பெங்களூரு.

*ஐயப்பனின் பெற்றோர் யார்?

பெற்றோர்: மோகினி, சிவபெருமான் வளர்ப்பு பெற்றோர்: பந்தள ராணி, ராஜசேகர பாண்டியன்

எம்.பூரணி, குரோம்பேட்டை, செங்கல்பட்டு.

*அசைவம் சாப்பிட்ட அன்று கோயில் செல்லலாமா...

செல்லக் கூடாது. மீறி சென்றால் பாவம் சேரும்.

சி.ரம்யா, நித்திரவிளை, கன்னியாகுமரி.

*பிறந்த நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்வது நல்லதா...

நட்சத்திரம் வரும் நாளன்று கோயில் வழிபாடு செய்வது, பெற்றோரிடம் ஆசி பெறுவது நல்லது.

எல். கல்யாணி, பிராட்வே, சென்னை.

*வீட்டுவாசலில் சங்கு பதிப்பது ஏன்

திருஷ்டியைப் போக்கவும், நல்ல சக்தியை ஈர்க்கவும், மகாலட்சுமியின் அருளைப் பெறவும் வாசலில் சங்கு பதிக்கின்றனர்.

ஜி.மோகனா, திருச்சுழி, விருதுநகர்.

*விரும்பிய நேரத்தில் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் சொல்லலாமா?

சொல்லலாம். தேவாரப் பாடலில் திருஞான சம்பந்தர், 'துாங்கும் போதும், விழித்திருக்கும் போதும் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரியுங்கள்' என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us