sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 15, 2023 10:56 AM

Google News

ADDED : டிச 15, 2023 10:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.இந்துமதி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.

*விரதமிருக்கும் தாயாரை திட்டி விட்டேன். பரிகாரம் உண்டா?

தாயாரை வருந்தச் செய்வது பாவம். அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள். அதோடு அவர் இருக்கும்வரை பணிவிடை செய்யுங்கள்.

கே.முருகன், ஸ்ரீவைகுண்டம், துாத்துக்குடி.

*உடல் பலத்தை விட மன அடக்கம் சிறந்ததா...

மனக்கட்டுப்பாடுடன் வாழ்வதே வீரம். ஆனால் அனுமன் போல செயல் வீரனாக மாறுவது என்பது அரிய செயல்.

பி.விஜய்பாரதி, ஹலசூரு, பெங்களூரு.

*குபேரனுக்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

வெண்கலம் அல்லது தங்கத்தால் ஆன ஏழு விளக்குகள் ஏற்றுவது நல்லது.

ஆர்.வினோதா, சிங்கம்புணரி, சிவகங்கை.

*விநாயகருக்கு சிதறுகாய் உடைக்க கொடுத்ததை, என் மகன் பசியால் வாடும் ஒருவருக்கு கொடுத்து விட்டான். சரிதானா?

பசி போக்க விநாயகரே நேரில் வந்து தங்கள் மகனிடம் பெற்றதாக எண்ணுங்கள்.

கே.வத்சலா, சிதம்பரம், கடலுார்.

*விநாயகர், அனுமனை சனி பிடிக்கவில்லையாமே...

முதல் கடவுளான விநாயகரின் அருள்பலம், அனுமனின் தவபலமே இதற்கு காரணம். இவர்களை வழிபட கிரக தோஷம் நெருங்காது.

ஆர்.மோகனா, துவாரகா, டில்லி.

*அருணோதயம், சூரியோதயம் இரண்டும் ஒன்றா...

இல்லை. சூரியன் உதிக்கும் முன்பாக வானம் சிவந்திருக்கும். அது அருணோதயம். சூரியன் உதிப்பது (கண்ணுக்குத் தெரிவது) சூரியோதயம்.

எம்.கணேஷ், பிராட்வே, சென்னை.

*அமாவாசையன்று குழந்தை பிறந்தால்...

குழந்தை பிறப்பு இயற்கையானது. அதனால் அமாவாசை தோஷம் கிடையாது. பிறப்புக்கும், இறப்புக்கும் ஆதாரமாக இருப்பவர் கடவுள்.

கே.கண்ணன், திங்கள்நகர், கன்னியாகுமரி.

*குருபக்தியால் நற்கதியடைந்தோர் யார்?.

குருநாதர் - சீடர்கள்

ஆதிசங்கரர் - தோடகாசாரியார்

ராமானுஜர் - கூரத்தாழ்வார்

இவர்களைப் போல இன்னும் பலர்.

கே.சந்தோஷ், நத்தம், திண்டுக்கல்.

*பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் - விளக்கம்.

சன்னதியை வலம் வருவது பிரதட்சிணம். தரையில் உருண்டபடி செல்வது அங்கப்பிரதட்சிணம். இரண்டுமே புண்ணியம் தரும்.

எஸ்.கவிதா, ஆலந்துார், செங்கல்பட்டு.

*கோள் தீர்த்த விநாயகரின் சன்னதி எங்குள்ளது?

நவக்கிரகத் தலங்களில் ஒன்றான சூரியனார் கோவிலில்(தஞ்சாவூர் மாவட்டம்) உள்ளது.






      Dinamalar
      Follow us