sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 08, 2024 01:38 PM

Google News

ADDED : மார் 08, 2024 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கமலினி, கன்னிவாடி, திண்டுக்கல்.

*சிவராத்திரியன்று அன்னதானம் செய்யலாமா?

சிவனுக்காக விரதமிருந்து விழித்திருக்கும் நாள் சிவராத்திரி. விரதம் இல்லாதவர்கள் மட்டும் அன்னதானம் செய்யலாம்.

வி.பவித்ரன், திருத்தணி, திருவள்ளூர்.

*சிவ மந்திரம் ஜபித்தால் தீய பண்புகள் தீருமா...

நமசிவாய, சிவாயநம மந்திரங்களை தினமும் ஜபிக்க தீய பண்புகள் தீரும்.

எம்.ராகவி, நல்லாத்துார், கடலுார்.

*மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி - வேறுபாடு என்ன?

பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை தன் கழுத்தில் அடக்கி உலகைக் காத்தார் சிவன். இது மாசி தேய்பிறை சதுர்த்தசியன்று நடந்தது. இந்நாளை மகாசிவராத்திரியாகவும், மற்ற மாதங்களில் மாத சிவராத்திரியாகவும் வழிபடுகிறோம்.

ஜி.விஷால், தேவனஹள்ளி, பெங்களூரு.

*மாதந்தோறும் பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்யலாமா...

பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்தால் ஆயுள், உடல் நலம் பெருகும். நிம்மதி கிடைக்கும்.

கே.அருணா, தாம்பரம், செங்கல்பட்டு.

*மகாபிரளயம் என்றால் என்ன?

கலியுகம் முடிந்ததும் இந்த உலகத்தை சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொண்டு, உயிர்களுக்கு எல்லாம் பேரின்பம் அளிப்பார். இதை மகாபிரளயம் என்பர்.

வி.விக்ரம், சுரண்டை, திருநெல்வேலி.

*யோக சிவராத்திரி என்றால் என்ன?

திரயோதசி - பார்வதி

சதுர்த்தசி - சிவன் இந்த இரு திதிகளும் திங்கட்கிழமையன்று ஒன்று சேர்வது யோக சிவராத்திரி.

கே.பாஸ்கர், ஒண்டிப்புதுார், கோயம்புத்துார்.

*சிவன் கோயிலுக்கு செல்ல நேரம் பார்க்க வேண்டுமா?

'ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்' இதை சிந்தித்தபடி உடனே கோயிலுக்குச் செல்லுங்கள்.

எஸ்.வைஜந்தி, கரோல்பாக், டில்லி.

*சிவராத்திரியன்று மந்திர தீட்சை பெறலாமா?

மந்திர தீட்சை பெற்று, ஜபிக்கத் தொடங்குவது நல்லது.

எஸ்.அவினாஷ், கொட்டாம்பட்டி, மதுரை.

*சிவன் கோயிலில் தீர்த்தம் கொடுப்பதில்லையே...

சில சிவன் கோயில்களில் தீர்த்தம் கொடுக்கின்றனர். இதைக் குடித்தால் பாவம் தீரும். அகால மரணம் நிகழாது.

எம்.ராஜாராம், கருங்கல், கன்னியாகுமரி.

*கனவில் நல்ல பாம்பு என்னைக் கொத்தியது. பரிகாரம் என்ன?

சிவனருளால் நல்லதே நடக்கும். பணம், புகழ் சேரும். சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.






      Dinamalar
      Follow us