sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 08, 2024 01:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 01:38 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கமலினி, கன்னிவாடி, திண்டுக்கல்.

*சிவராத்திரியன்று அன்னதானம் செய்யலாமா?

சிவனுக்காக விரதமிருந்து விழித்திருக்கும் நாள் சிவராத்திரி. விரதம் இல்லாதவர்கள் மட்டும் அன்னதானம் செய்யலாம்.

வி.பவித்ரன், திருத்தணி, திருவள்ளூர்.

*சிவ மந்திரம் ஜபித்தால் தீய பண்புகள் தீருமா...

நமசிவாய, சிவாயநம மந்திரங்களை தினமும் ஜபிக்க தீய பண்புகள் தீரும்.

எம்.ராகவி, நல்லாத்துார், கடலுார்.

*மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி - வேறுபாடு என்ன?

பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை தன் கழுத்தில் அடக்கி உலகைக் காத்தார் சிவன். இது மாசி தேய்பிறை சதுர்த்தசியன்று நடந்தது. இந்நாளை மகாசிவராத்திரியாகவும், மற்ற மாதங்களில் மாத சிவராத்திரியாகவும் வழிபடுகிறோம்.

ஜி.விஷால், தேவனஹள்ளி, பெங்களூரு.

*மாதந்தோறும் பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்யலாமா...

பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்தால் ஆயுள், உடல் நலம் பெருகும். நிம்மதி கிடைக்கும்.

கே.அருணா, தாம்பரம், செங்கல்பட்டு.

*மகாபிரளயம் என்றால் என்ன?

கலியுகம் முடிந்ததும் இந்த உலகத்தை சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொண்டு, உயிர்களுக்கு எல்லாம் பேரின்பம் அளிப்பார். இதை மகாபிரளயம் என்பர்.

வி.விக்ரம், சுரண்டை, திருநெல்வேலி.

*யோக சிவராத்திரி என்றால் என்ன?

திரயோதசி - பார்வதி

சதுர்த்தசி - சிவன் இந்த இரு திதிகளும் திங்கட்கிழமையன்று ஒன்று சேர்வது யோக சிவராத்திரி.

கே.பாஸ்கர், ஒண்டிப்புதுார், கோயம்புத்துார்.

*சிவன் கோயிலுக்கு செல்ல நேரம் பார்க்க வேண்டுமா?

'ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்' இதை சிந்தித்தபடி உடனே கோயிலுக்குச் செல்லுங்கள்.

எஸ்.வைஜந்தி, கரோல்பாக், டில்லி.

*சிவராத்திரியன்று மந்திர தீட்சை பெறலாமா?

மந்திர தீட்சை பெற்று, ஜபிக்கத் தொடங்குவது நல்லது.

எஸ்.அவினாஷ், கொட்டாம்பட்டி, மதுரை.

*சிவன் கோயிலில் தீர்த்தம் கொடுப்பதில்லையே...

சில சிவன் கோயில்களில் தீர்த்தம் கொடுக்கின்றனர். இதைக் குடித்தால் பாவம் தீரும். அகால மரணம் நிகழாது.

எம்.ராஜாராம், கருங்கல், கன்னியாகுமரி.

*கனவில் நல்ல பாம்பு என்னைக் கொத்தியது. பரிகாரம் என்ன?

சிவனருளால் நல்லதே நடக்கும். பணம், புகழ் சேரும். சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us