sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 08, 2024 01:56 PM

Google News

ADDED : மார் 08, 2024 01:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய திருமுறைகளின் தொகுப்பு தேவாரம்.

* தமிழகத்தில் இருக்கும் ஒரே ஜோதிர்லிங்கத்தலம் ராமேஸ்வரம்.

* பஞ்சாட்சரம் என்பது 'ஐந்தெழுந்து மந்திரம்'.

* படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அதிபதி சிவபெருமான்.

* 'சிவன்' என்றால் 'மங்கலம் தருபவர்'.

* 'அப்பா(சிவன்) நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும். ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு காட்டவேண்டும்' என வேண்டுகிறார் வள்ளலார்.

* சிவபெருமானைத் தரிசிப்பதற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர்.

* பக்தன் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனைக் காலால் எட்டி உதைத்தவர் சிவபெருமான்.

* நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.

* தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றியவர் நமிநந்தியடிகள்.

* பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை 'திருப்பாட்டு' எனக் குறிப்பிடுவர்.

* இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத் தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம்.

* மயில் வடிவில் சிவனை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்.

* திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில்.

* பூலோக கைலாயம் என போற்றப்படும் தலம் சிதம்பரம் நடராஜர் கோயில்.

* ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம் திருவாடானை.






      Dinamalar
      Follow us