sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 22, 2024 09:13 AM

Google News

ADDED : மார் 22, 2024 09:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*எந்த மாதம் குலதெய்வ வழிபாட்டுக்கு ஏற்றது?

எம்.பூரணி, பொன்னேரி, திருவள்ளூர்.

முன்னோர்கள் நிர்ணயித்த மாதத்தில் வழிபடுங்கள். தற்போது மகாசிவராத்திரி, பங்குனி உத்திர நாட்களில் குலதெய்வ வழிபாட்டை நடத்துகின்றனர்.

*பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பது ஏன்?

எல்.ஆர்த்தி, பள்ளியாடி, கன்னியாகுமரி.

பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்த நாள் பங்குனி உத்திரம். இந்நாளில் விரதமிருந்தால் மணவாழ்வு சிறக்கும்.

*பங்குனி மாதத்தில் அரசுப் பணிக்கு முயற்சித்தால் வெற்றி கிடைக்குமா?

எல்.சாந்தகுமார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி.

வெற்றி கிடைக்கும். அரசுப்பணியில் சேர, அரசு ஒப்பந்தம் பெற பங்குனி உத்திர நாளில் முயற்சி செய்யுங்கள்.

*செவ்வாய் தோஷம் தீர...

ஆர்.வைதேகி, கல்யாண்புரி, டில்லி.

செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமும், நவக்கிரக சன்னதியிலுள்ள செவ்வாய்க்கு அர்ச்சனையும் செய்யுங்கள்.

*பங்குனி உத்திரத்திற்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம்?

எஸ்.பிருந்தா, ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி.

சிவனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாக முருகப்பெருமான் அவதரித்த நாள் பங்குனி உத்திரம்.

*சபரிமலை ஐயப்பன் குத்துக்காலிட்டு இருப்பது ஏன்?

கே.காருண்யா, பட்டிவீரன்பட்டி, தேனி.

முழங்காலைக் கட்டியும், கைகளை நீட்டியும் குத்துக்காலிட்டு அமர்வது 'யோக முத்திரை. இது புலன் அடக்கம், தவத்தின் சிறப்பை உணர்த்துகிறது.

*ஆங்கில மாதத்தில் எட்டாம் தேதியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

ஆர்.கவிதா, காரைக்குடி, சிவகங்கை.

வெளிநாட்டினர் எட்டாம் தேதியை தவிர்க்கின்றனர். பஞ்சாங்கத்தின்படி நல்ல நாளாக இருந்தால் சுபநிகழ்ச்சியை நடத்தலாம்.

*பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபடலாமா?

ஜே.கிஷோர், குன்னுார், நீலகிரி.

வழிபடலாம். அன்று (மாலை 4:30 - 6:00 மணி) நரசிம்மருக்கு விளக்கேற்ற கிரகதோஷம் விலகும்.

*ஸ்ரீமதி, திருமதி, சவுபாக்கியவதி என பெண்களைக் குறிப்பிடுவது ஏன்?

எஸ்.ஆனந்தி, சன்னபட்னா, பெங்களூரு.

பெண்களை கண்ணியத்துடன் பார்க்கிறது ஹிந்து மதம். பெண்கள் சிறப்பாக வாழ மேற்கூறிய அடைமொழிகளை பயன்படுத்துகிறோம்.






      Dinamalar
      Follow us