sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 21, 2024 12:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2024 12:36 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குமார், சிவகங்கை.

*உழைப்பின்றி சேர்த்த பணம்....

உழைப்பால் கிடைத்த பணம் நிற்கும். உழைக்காமல் வந்த பணம் வந்த வேகத்தில் மறையும்.

எம்.சண்முகப்பிரியா, குழித்துறை, கன்னியாகுமரி.

*முக்கனிகளால் அபிஷேகம் செய்வது ஏன்?

மா, பலா, வாழை. இவை மூன்றும் சிறந்தவை என்பதால் அபிஷேகம் செய்கிறோம்

கே.பாலச்சந்தர், பாரிமுனை, சென்னை.

*தலவிருட்சத்தில் என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?

தலவிருட்சத்தை வழிபட்டால் போதும். பொம்மை, தொட்டில், துணியால் முடிச்சிடுவது, நுாலைச் சுற்றுவது கூடாது.

சி.சந்தோஷ், மதுக்கரை, கோயம்புத்துார்.

*திருமணம், அன்னதானத்தில் உணவு வீணாகிறதே...

உணவை வீணாக்குவது பாவம். தேவைக்கேற்ப உணவு தயாரியுங்கள்.

சி.சாய்சரண், ஏரோசிட்டி, டில்லி.

*பெருநெறி என்றால் என்ன?

எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துவது பெருநெறி. ஆனால் நாம் மதம், ஜாதி, மொழி என குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறோம்.

கே.மாலதி, மேகமலை, தேனி.

*48 நாள் விரதத்தில் அசைவம் சாப்பிடலாமா...

பாவம் போக்குவதே விரதம். அச்சமயம் அசைவம் சாப்பிடுவது கூடாது. மீண்டும் 48 நாள் விரதம் இருங்கள்.

எஸ்.புவனேஸ்வரி, ஒயிட்பீல்டு, பெங்களூரு.

*உறுப்பு தானத்தை ஹிந்து மதம் அனுமதிக்கிறதா?

அனுமதிக்கிறது. ஒருவர் தன் உறுப்பை மற்றொருவர் பயன்படுத்தும் விதத்தில் தானம் அளிப்பது சிறந்த பண்பு. தாராளமாக கொடுங்கள்.

ஆர்.ஆனந்தி, சன்யாசிகுப்பம், புதுச்சேரி.

*கவலையில் இருந்து மீள வழியுண்டா?

உலகின் உரிமையாளரான கடவுளைச் சரணடையுங்கள். கவலை வராது.

ஆர்.அபிதா, புவனகிரி, கடலுார்.

*எத்தனை நாளுக்கு ஒருமுறை மவுன விரதம் இருக்கலாம்?

காலையில் அரை மணி நேரம் மவுனமாக இருங்கள். செவ்வாய், வெள்ளி, பிரதோஷ நாட்களில் பேசாமல் இருப்பது நல்லது. இதனால் ஆத்ம பலம் அதிகரிக்கும்.

எம்.கே.மகாலட்சுமி, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.

*சிதம்பரம் நடராஜர் கோயிலில் பின்பற்றும் ஆகமம் எது?

கோயில் வழிபாட்டு முறையைச் சொல்லும் நுால் ஆகமம். சிவ ஆகமங்கள் 28. அதில் ஒன்றான மகுட ஆகமம் இங்கு பின்பற்றப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us