sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 27, 2024 12:21 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 12:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.பிரபு, கள்ளிக்குடி, மதுரை.

*சாப்பிட்டதும் இலையை மூடலாமா...

சுபநிகழ்ச்சியின் போது இலையை மூடக் கூடாது. அசுப நிகழ்ச்சியில் மூடலாம்.

வி.ரஜனி, நாகர்கோவில், கன்னியாகுமரி.

*திருநீறை எந்த திசை நோக்கி பூச வேண்டும்?

காலையில் கிழக்கு நோக்கியும் (மதியம் 12:00 மணி வரை), மற்ற நேரத்தில் வடக்கு நோக்கியும் பூச வேண்டும்.

எஸ்.வினிதா, மடிவாலா, பெங்களூரு.

*சுமங்கலி பிரார்த்தனைக்கான ஸ்லோகம் என்ன?

மங்களே மங்களா தாரே

மாங்கல்யே மங்கலப்ரதே|

மங்களார்த்தம் மங்களேசி

மாங்கல்யம் தேஹிமே சதா||

ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.

*என்றும் பதினாறு என வாழும் மார்க்கண்டேயரின் பெற்றோர் யார்?

தாயார் மருத்துவதி. தந்தையார் மிருகண்டு முனிவர்.

டி.ராகவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*யாருடைய கண்ணீரை பார்க்கக் கூடாது?

பிள்ளைகளின் கண்ணீரை பெற்றோர், பெற்றோரின் கண்ணீரை பிள்ளைகள் பார்க்கக் கூடாது. ஒருபோதும் இதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்.

பி.மைதிலி, ஜனக்புரி, டில்லி.

*புராணங்கள் மொத்தம் எத்தனை?

18. வியாசரால் இயற்றப்பட்ட இதை 'பதினெண் புராணங்கள்' என அழைக்கிறோம்.

எம்.அனிதா, கன்னிவாடி, திண்டுக்கல்.

*மறந்தும் பிறன்கேடு சூழற்க என்பதன் பொருள் என்ன?

மனதாலும் ஒருவருக்கு தீங்கு நினைக்க கூடாது. மீறினால் தர்மதேவதையால் தண்டிக்கப்படுவீர்கள்.

வி.ராஜன், மேலப்பாளையம், திருநெல்வேலி.

*பிறவிக் குணங்கள் எவை?

காமம், குரோதம். அதாவது ஆசை, கோபம். இவை இரண்டையும் ஒழிக்க முடியாது. குறைக்கலாம்.

கே.மணிவண்ணன், அனுப்பர்பாளையம், திருப்பூர்.

*இசையின் பெற்றோர் யார்?

ஸ்ருதியை மாதா என்றும், லயத்தை பிதா என்றும் குறிப்பிடுவர். தடுமாற்றம் இல்லாமல் ஸ்ருதி ஒலிக்க வேண்டும். தாளத்திற்கு ஏற்ப இசை செல்ல வேண்டும்.

எல்.ரவி, திருத்தணி, திருவள்ளூர்.

*பெரியவர், துறவிகளை வணங்கும் போது காலை தொட்டு வணங்கலாமா?

தேவையில்லை. கை குவித்து வணங்கினால் போதும்.






      Dinamalar
      Follow us