sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நாக்குக்கு அடிமையாகாதே!

/

நாக்குக்கு அடிமையாகாதே!

நாக்குக்கு அடிமையாகாதே!

நாக்குக்கு அடிமையாகாதே!


ADDED : ஜூன் 15, 2010 04:36 PM

Google News

ADDED : ஜூன் 15, 2010 04:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- வாரியார்

* இறைவன் நமக்குச் செய்யும் அனைத்தும் அருள்தான். சிலசமயம் நமக்குத் துன்பம் போலத் தோன்றினாலும் அது நம் அறியாமையே காரணம்.

* ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல, கடினமான செயலை நிறைவேற்ற பலரின் உதவியைப் பெறவேண்டியிருக்கும்.

* யாரையும் "இவன் சிறியவன்' என்று அவமதிக்காதீர்கள். பிறரை அலட்சியம் செய்பவனை ஆண்டவனும் ஒரு பொருளாக மதிக்கமாட்டான்.

* தன்னைத் தானே சோதித்துப் பழகுங்கள். அதனால், உங்களை தீமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பலம் பெறுவீர்கள்.

* ஏழையை ஓங்கி அடித்தவன் மறுபிறவியில் கையொடிந்து முடமாவான். யாரையும் துன்புறுத்தி இன்பம் பெற நினைப்பது பெரும் பாவம்.

* தெய்வ உணர்வு ஒன்று தான் மனிதனை விலங்கு நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

* எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை.

* நாக்குக்கு அடிமையாகாதே. கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே நல்லது.

* பொறாமை, ஆசை, கோபம் ஆகிய தீயகுணங்கள் மனதை பலவீனப்படுத்துகின்றன. தியானப்பயிற்சியால் மனம் தூய்மை பெறும்.






      Dinamalar
      Follow us