sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!

/

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!


ADDED : ஜூன் 15, 2010 04:35 PM

Google News

ADDED : ஜூன் 15, 2010 04:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-காஞ்சி பெரியவர்

* குழந்தையாக இரு என்று உபநிடதம் நமக்கு உபதேசம் செய்கிறது. பிள்ளை மனதில் கள்ளம் கபடம் சிறிதும் இருப்பதில்லை.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது.

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்கவேண்டும்.

* எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே அதிக சக்திவாய்ந்தது.

* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுளே குடிகொண்டிருக்கிறார். ஒருவரை வணங்கும்போது அவருக் குள் இருக்கும் கடவுளையே வழிபாடு செய்கிறோம்.

* சுவரில் எறிந்த பந்து திரும்பிவருவதைப் போல, நிறைவேறாத ஆசைகள் கோபமாகத் திரும்பி நம்மை வந்து தாக்கிவிடும்.

* ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள்தேடி அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.

* பொம்மலாட்டப் பொம்மை போல சகல உயிர்களுக்கும் உள்ளிருந்து கடவுளே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.

* வழியில் கிடக்கும் முள்ளையோ, கண்ணாடியையோ அப்புறப்படுத்த பணம் ஏதும் தேவையில்லை. சிறு அளவிலான உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.






      Dinamalar
      Follow us