
* 'வி' என்றால் மேலானவர், நாயகன் என்றால் தலைவர். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாத தெய்வம் 'விநாயகர்'
* கண என்பது உயிர்க்கூட்டங்களை குறிக்கும், பதி என்பது தலைவனை குறிக்கும். உயிர்க்கூட்டங்களின் தலைவன் கணபதி ஆவார்.
* விநாயகரின் முதல் பக்தர் புருசுண்டி முனிவர்.
* விநாயகருக்கு முதன் முதலில் கொழுக்கட்டை செய்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.
* விநாயகருக்கு முதன் முதலில் தோப்புகரணம் இட்டு வழிபட்டவர் அகஸ்தியர்.
* விநாயகருக்கு முதன் முதலில் அகவல் பாடியவர் அவ்வையார்.
* நவக்கிரகங்களில் கேதுவின் அதிதேவதை விநாயகர்.
* விநாயகருக்கு ஒரு கொம்பு, இரண்டு செவி, மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள், ஆறு எழுத்து மந்திரத்தை உடையவர் என எண்ணலங்காரத்தில் வணங்குவார் வாரியார்.
* நான்கு யுகத்திலும் விநாயகருக்கு அமைந்த வாகனங்கள்.
கிருதயுகம் - சிம்மம்
திரேதா யுகம் - மயில்
துவாபர யுகம் - மூஞ்சுறு
கலியுகம் - எலி