ADDED : ஜன 24, 2014 12:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ராமானுஜரின் இயற்பெயர்.......
இளையனார்
2. ராமானுஜர் மீது 'யதிராஜ வைபவம்' என்ற நூலை படைத்தவர்.......
வடுகநம்பி
3. 'திருமாலை' என்னும் நூலைப் பாடிய ஆழ்வார்......
தொண்டரடிப் பொடியாழ்வார்
4. துளசிதாசர் எழுதிய ராமாயணம்.....
ராமசரித மானஸ்
5. துளசி ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்....
தஞ்சை டி.எஸ். கோதண்டராமன்
6. கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை ..... என்பர்.
பிராகாமியம்
7. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
8. மதுரையில் சித்தராக எழுந்தருளிய சிவன்......
சுந்தரானந்தர்
9. ஆலமர் செல்வன் என்று போற்றப்படுபவர்.......
தட்சிணாமூர்த்தி
10. ஸ்ரீரங்கம் பெரிய கோபுரத்தை கட்டியவர்...
அகோபிலம் 44வது பட்டம் அழகிய சிங்கர்