sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 10, 2023 05:38 PM

Google News

ADDED : செப் 10, 2023 05:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.காவ்யா, நெலமங்கலா, பெங்களூரு.

*நினைவாற்றல் பெருக யாரை வழிபடலாம்?

யாதேவீ சர்வபூதேஷு

ஸ்ம்ருதி ரூபேண சம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோநம:

என்னும் ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொல்லி, அம்பிகையை வழிபடுங்கள்.

கே.ராஜேஸ்வரி, திருநாவலுார், கள்ளக்குறிச்சி.

*எருமை சாணத்தால் வாசல் தெளிக்கலாமா?

தெளிக்கக் கூடாது. தெய்வீகமானதும், கிருமி நாசினியுமான பசுவின் சாணத்தால் வாசல் தெளியுங்கள்.

எம்.பிரசன்னகுமார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

*நவக்கிரக சன்னதியில் முதலில் யாரை வழிபட வேண்டும்?

முதலில் சூரியனை வழிபட வேண்டும். பின் இடமிருந்து வலமாக மற்ற கிரகங்களை சுற்றி வர வேண்டும்.

எம்.பவித்ரன், மல்லாங்கிணறு, விருதுநகர்.

*பக்தருக்கான பண்புகள் என்னென்ன?

கோயிலில் தொண்டு செய்தல், பிறரைக் குறை கூறாதிருத்தல், பொறுமை, பணிவுடன் நடத்தல், சுயநலமின்மை, இனிமையாக பழகுதல்.

கே.பரத், சிறுமுகை, கோயம்புத்துார்.

*காலையில் குளிக்க ஏற்ற நேரம் எது?

சூரிய உதயத்திற்கு முன் குளித்தால் புண்ணியம் சேரும். அதிகாலை எழுவதால் மனமும், உடலும் நலம் பெறும்.

கே.ரங்கராஜ், மணிமுத்தாறு, திருநெல்வேலி.

*ஐஸ்வர்யம் என்பதன் பொருள் என்ன?

ஐஸ்வர்யம் என்பது செல்வம். இதன் அதிபதியான மகாலட்சுமியை வழிபட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

கே.சரணவன், சாந்தினிசவுக், டில்லி.

*நந்தி மகன்தனை என்பது யாரைக் குறிக்கும்?

நந்தி - சிவன்,

நந்தி மகன்தனை - விநாயகரைக் குறிக்கும்.

எம்.மணிகண்டன், திருவட்டாறு, கன்னியாகுமரி.

*யாரைக் கண்டு பயப்பட வேண்டும்?

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவரைக் கண்டால் பயப்பட வேண்டும்.

சி.எல்.குமார், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

*கடவுளை கை கூப்பி வணங்கினால் போதுமா...

வணங்குவதில் மூன்று வகையுண்டு. கை கூப்புதல், தலை தாழ்த்தி வணங்குதல், தரையில் விழுந்து வணங்குதல். இந்த மூன்றையும் செய்வது நல்லது.

எல்.சுப்பிரமணியன், உசிலம்பட்டி, மதுரை.

*இறப்பு வீடுகளில் திருவாசகம் படிக்கலாமா?

சிவபெருமானின் மறுவடிவம் திருவாசகம். இதை இறப்பு வீட்டில் படித்தால் அந்த ஆன்மா சிவபெருமானின் திருவடியை அடையும்.






      Dinamalar
      Follow us