sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மாணிக்கவாசகர் பாடுகிறார் - திருவாசகம் பாடல் - 144

/

மாணிக்கவாசகர் பாடுகிறார் - திருவாசகம் பாடல் - 144

மாணிக்கவாசகர் பாடுகிறார் - திருவாசகம் பாடல் - 144

மாணிக்கவாசகர் பாடுகிறார் - திருவாசகம் பாடல் - 144


ADDED : செப் 24, 2010 12:36 PM

Google News

ADDED : செப் 24, 2010 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழிப்புஇல் நின் பாதம் பழம்தொழும்பு

எய்தி விழப் பழித்து

விழித்து இருந்தேனை விடுதி கண்டாய்!

வெண் மணிப் பணிலம்

கொழித்து மந்தாரம் மந்தாகினி

நுந்தும் பந்தப் பெருமை

தழிச்சிறை நீரில் பிறைக்கலம்

சேர்தரு தாரவனே!

பொருள்: சிவபெருமானே! முத்து, சங்கு, மந்தாரமலர் ஆகியவற்றை அடித்துக் கொண்டு, கங்கை நதி  வருகின்றது. அக்கங்கை நீரைத் தேக்கி வைக்கும் அணைபோல, உன்

ஜடாமுடி இருக்கின்றது. அந்த அணையில் மிதக்கும் படகு போல இளம்பிறை விளங்குகின்றது. வெற்றி மாலையை அணிந்தவரே! குற்றமற்ற உன் திருவடிகளை வழி

வழியாக பின்பற்றும் முறைப்படி பணிந்து போற்றினேன். பாதியில் அப்படியே மறந்துவிட்டு பழித்துரைக்கத் தொடங்கி, விழித்துக் கொண்டு நிற்கின்றேன். அப்படிப்பட்ட அற்பன் தான் நான்! இருப்பினும், என்னை அப்படியே விட்டுவிட்டாயே!

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடுகிறார் - பாடல் - 208

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம்இல் மருவி

உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்

கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்

கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கு அருளி

மன்னு குறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதில்சூழ்

சோலை மலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!

என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை

ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.

பொருள்:  ஊழிக் காலத்திலும் அழியாமல் இருக்கும் குறுங்குடியில் வீற்றிருப்பவனே!

திருவெள்ளறையில் வாழ்பவனே! மதில் சூழ்ந்த திருமாலிருஞ்சோலைக்கு அதிபதியே! திருகண்ணபுரத்தில் இருக்கும் அமுதமே! என் துன்பங்களைக் களைவாயாக.

உன்னை இடுப்பில் வைத்துக் கொண்டு தம் இல்லங்களில் கொண்டாடும் கோபியர்கள் அனைவரும் மகிழும்படியாகவும், உன்னைப் பார்த்தவர்களின் கண்கள் குளிரும்படியாகவும், கற்றவர்கள் உன் மீது கவிபாடும் படியாகவும் செங்கீரை ஆடுவாயாக. ஏழு உலகங்களுக்கும் தலைவனே! ஆடுவாயாக.






      Dinamalar
      Follow us