
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவ தத்துவ ஞானா
அரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.
பொருள்: சிவன் பெற்ற நல்ல பிள்ளையே! திருவண்ணாமலையில் வாழும் முருகனே! மேலான கருணையுடன் பெருவாழ்வு தருபவனே! சிவ தத்துவமான ஞானவடிவே! இரவும், பகலும் முத்தமிழால் உன் புகழ் பாடும் பாக்கியத்தையும், நிலையான உண்மையை அறியும் திருவருளையும் தருவாயாக.

