
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீரும் மலரும் நிலவும் சடையில்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர் சித்தீச் சரமே.
பொருள்: கங்கை நீரும், கொன்றைமலரும், இளம்பிறையும் அணிந்த சடையனே! அசைந்தாடும் பாம்பினை கழுத்தில் அணிந்தவனே! வழிந்தோடும் அருவிநீரில் நவமணிகள் பரவிக் கிடக்க, வளம் கொழிக்கும் சித்தீச்சரம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனே! உன்னைப் போற்றுகின்றேன்.
குறிப்பு: கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகிலுள்ள திருநறையூர் சிவன் கோயிலே
சித்தீச்சரம் என்ற புராணப்பெயர் பெற்றுள்ளது.