
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்
கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
பொருள்: மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தவரே! விண்ணிலிருந்து பாய்ந்த கங்கையை சடையில் தாங்கியவரே! பாவத்தைப் போக்குபவரே! கொடிய அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்தவரே! திருவாரூரில் அரநெறியப்பராக விளங்கும் சிவபெருமானே! உன்னைப் போற்றுகிறேன்.