
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வன்மா வையம் அளந்த எம் வாமனா! நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படுகின்ற யான்
தொன்மாவல் வினைத் தொடர்களை முதலரிந்து
நின்மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ!
பொருள்: வலியதும், பெரியதுமான இந்த உலகத்தை திருவடியால் அளந்த வாமனமூர்த்தியே! மாயங்கள் நிறைந்த இந்த பிறவிக்குள் அகப்பட்டதால், படாத பாடு படுகின்றேன். என் பழைய முன்வினைப் பாவமெல்லாம் அடியோடு நீங்கி, உமது பெரிய திருவடிகளை அடைவது எந்த நாளோ?