
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து சுரக்குமோ
சந்த மறை ஆகமம் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
பொருள்: உயிர்களைப் பற்றியுள்ள பாசம் என்ற மாயையை போக்கும் குணக்கடலே! எல்லா உலகங்களையும் தோற்றுவித்தவரே! வேதத்தையும், ஆகமங்களையும் உலகிற்கு அளித்தவரே! முதல் கடவுளாகிய கணபதியே! உமது திருவடியை அன்புடன் வணங்குகிறோம்.
குறிப்பு: கபிலரின் காரிய சித்தி மாலை பாடல்.

