நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலநேமி காலனே! கணக்கிலாத கீர்த்தியாய்!
ஞாலமேழும் உண்டு பண்டொர் பாலனாய பண்பனே!
வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீர! நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே!
பொருள்: காலத்தை நிர்ணயிக்கும் காலனுக்கும் காலனாக இருப்பவனே! அளவற்ற புகழ் கொண்டவனே! உலகம் ஏழினையும் உண்ட கண்ணனே! ஆலிலையில் துயிலும் பாலகனே! கடலும் வற்றும் விதத்தில் கோபத்துடன் வில்லை வளைத்த வீரனே! சரணடைந்த
அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! உன்னைப் போற்றுகிறேன்.
குறிப்பு: திருமழிசையாழ்வார் பாடிய பாடல்

