ADDED : செப் 22, 2015 12:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. வைஷ்ணம் என்பதன் பொருள்...
விஷ்ணு சம்பந்தமானது
2. விஷ்ணு என்பதன் பொருள்
எங்கும் நிறைந்திருப்பவர்
3. திருமாலுக்குரிய விஷ்ணு சூக்தம் என்னும் மந்திரம் இடம் பெற்ற வேதம்.......
சாமவேதம்
4. திருமால் எடுத்த அவதாரங்களை விவரிக்கும் புராணம்........
பாகவத புராணம்
5. திருப்பதியில் மீனாய் பிறக்க விரும்பிய ஆழ்வார்........
குலசேகராழ்வார்
6. பூலோகத்தில் தரிசிக்க முடியாத இரு திவ்ய தேசங்கள்.......
பரமபதம், பாற்கடல்
7. பக்தவத்சலன் என்பதன் பொருள்
தாய் போல காக்கும் திருமால்
8. திருப்பதி வெங்கடாஜலபதி அவதரித்த நாள்.......
திருவோணம்
9. 108 திவ்யதேசங்களில் பெருமாள் நின்றகோலத்தில் அருளும் தலங்கள்.......
67
10. ஆலிலையில் கண்ணன் சயனத்திருப்பதை....... என்று குறிப்பிடுவர்
பத்ர சயனம், பத்ரம் என்றால் இலை.

