sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

முருகன் 41

/

முருகன் 41

முருகன் 41

முருகன் 41


ADDED : ஜன 14, 2014 12:01 PM

Google News

ADDED : ஜன 14, 2014 12:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும் தெரிந்து கொள்வோம்.

1. முருகன் - அழகன்.

2. பிள்ளையார் - சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.

3. சித்தன் - அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.

4. சேயோன் - செந்நிறம் உடையவன்.

5. வேள் - எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் <உடையவன்.

6. வேலன் - வெற்றி தரும் வேலை உடையவன். அரன் மகன் - சிவனின் புத்திரன்.

7. அறுமீன் காதலன் - கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.

8. அறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.

9. குரு - சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் <உரைத்தவன்.

10. கோழிக்கொடியோன் - சேவலைக் கொடியாக உடையவன்.

11. கங்கை மைந்தன் - தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.

12. கடம்பன் - கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.

13. கந்தன் - வலிமையான தோள்களை உ<டையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.

14. காங்கேயன் - கங்கை மைந்தன்

15. கார்த்திகேயன் - கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.

16. குகன் - மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.

17. குமரன் - சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.

18. குழகன் - அழகன், இளமையானவன்.

19. குறிஞ்சி வேந்தன் - மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.

20. குன்றெறிந்தோன் - கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.

21. கவுரி நந்தனன் - உமாதேவியின் மைந்தன்.

22. சண்முகன் - ஆறு முகம் கொண்டவன்.

23. சரவணபவன் - நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.

24. சிலம்பன் - காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.

25. சுரேசன் - துன்பம் நீக்குபவன்.

26. சூர்ப்பகைவன் - எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.

27. செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.

28. சேந்தன் - சிவப்பு நிறமுடையவன்

29. சேவற்கொடியோன் - சேவலைக் கொடியில் தாங்கியவன்.

30. தெய்வானை காந்தன் - தெய்வானையின் கணவன்.

31. தேவசேனாபதி - சேனைக்குத் தலைவன்.

32. பாவகி, பாவகாத்மஜன் - பரிசுத்தம் உடையவன்.

33. மஞ்ஞையூர்தி - மயிலை வாகனமாகக் கொண்டவன்.

34. மாயோன் மருகன் - திருமாலின் மருமகன்.

35. வள்ளி மணாளன் - வள்ளியின் கணவன்.

36. பாகுலேயன் - கார்த்திகேயன்.

37. விசாகன் - வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.

38. சங்கத்தலைவன் - கலைகளை உணர்ந்த புலவன்.

39. சாமி - செல்வன்.

40. முத்தையன் - முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.

41. சுப்பிரமணியன் - வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.






      Dinamalar
      Follow us