sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடியது

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடியது

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடியது

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடியது


ADDED : டிச 11, 2013 02:32 PM

Google News

ADDED : டிச 11, 2013 02:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய

பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்

ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்

வாழ உறுதியேல் மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!

பொருள்: அழகிய சந்திரனே! பெரிய பானைகளில் உள்ள வெண்ணெயை கை நிறைய அள்ளி உண்டு மகிழும் பெரிய வயிறைக் கொண்டவன் கண்ணன். அவன் உன்னைக் கூவி அழைக்கின்றான். நீ வராவிட்டால், தன் ஆயுதமான சக்கரத்தை உன் மேல் எறிந்து விடுவான். இதில் சந்தேகமில்லை. வாழ விரும்பினால், கண்ணன் அழைக்கும்போதே ஓடி வந்து விடு.






      Dinamalar
      Follow us