ADDED : ஜன 29, 2018 09:19 AM

அ நிறம் | அளவு
1. முருகன் மீது கந்தர் அலங்காரம் பாடியவர்...
அருணகிரிநாதர்
2. பன்னிரு திருமுறையில் உள்ள சங்க கால நுால்.........
திருமுருகாற்றுப்படை
3. படைவீடுகளில் கட்டுமலையாக அமைந்த திருத்தலம்.........
சுவாமிமலை
4. பஞ்ச காவியங்களில் ஒன்றான முருகன் வரலாறு..........
குமார சம்பவம்
5. பழநிமலையின் புராணப்பெயர்.......
திருவாவினன்குடி
6. முருகனுக்கு தொடர்புடைய இரு மயில்கள்.........
இந்திரமயில், சூரமயில்
7. கந்தபுராணத்தை தமிழில் எழுதியவர்........
கச்சியப்ப சிவாச்சாரியார்
8. ராமருக்கு முருகனின் பெருமையை கூறியவர்........
விஸ்வாமித்திரர்
9. முருகனுக்கு நட்சத்திரத்தால் ஏற்பட்ட பெயர்கள்........
விசாகன், கார்த்திகேயன்
10. முருகனின் மயிலை, ஆடும் குதிரை (ஆடும் பரி) என குறிப்பிட்ட நுால்..........
கந்தரனுபூதி
