ADDED : நவ 05, 2010 04:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
(1) வயலூரிலுள்ள சுவாமி மற்றும் அம்பாளின் பெயர்...
ஆதிநாதர், ஆதிநாயகி அம்மன்.
(2) வள்ளி அவதரித்த தலம்?
வள்ளிமலை (வேலூர் மாவட்டம்)
(3) மயில்வாகன முருகப்பெருமானை இப்படி அழைப்பர்...
ஸ்ரீசிகி வாஹனர்.
(4) ஆங்கில வருடப்பிறப்பு அன்று படிப்பூஜை நடக்கும் அறுபடைத்தலம்...
திருத்தணி
(5) தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம்....
சுவாமிமலை
(6) சூரசம்ஹாரத்திற்கு வெற்றிப் பரிசாக இந்திரன் முருகனுக்கு அளித்த பரிசு.......
தன் மகள் தெய்வானை
(7) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முருகன் வீற்றிருக்கும் மலை....
பத்துமலை
(8) திருச்செந்தூரின் புராணப்பெயர்.....
திரிபுவனமாதவி சதுர்வேதிமங்கலம்
(9) குமரகுருபரர் முருகனை எவ்வாறு அழைக்கிறார்....
சைவக்கொழுந்து, சிவக்கொழுந்தீஸ்வரர்.
(10) பழநியில் முருகப்பெருமானை எப்படி அழைப்பர்...
தண்டாயுதபாணி