ADDED : ஜூலை 24, 2020 09:06 PM

* திருக்காளத்தி, கீழ்ப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் ஆகியவை கேது வழிபட்ட சிவத்தலங்களாகும்.
* ஆண்டாள் மாலையிட்டு தினமும் அழகு பார்த்த பெருமாள் ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி
* ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரத்தைக் கட்டிய மன்னர்.வல்லபதேவ பாண்டியன்.
* ஆண்டாள் பூமாதேவியின் அம்சமாக ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள்.
* பெரியாழ்வார் பூப்பறித்த தோட்டம் திருப்பூர நந்தவனம் என அழைக்கப்படுகிறது.
* நுாறு அண்டா பொங்கல் வைப்பதாக ஆண்டாள் வேண்டிக் கொண்ட தலம் மதுரை அழகர்கோவில்
* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேரை உருவாக்கியவர் வானமாமலை ஜீயர்
* வேதாந்த தேசிகனின் 'கோதா ஸ்துதி' என்னும் நுாலால் ஆண்டாளின் புகழ் வடநாட்டில் பரவியது
* கோயில் கல்வெட்டுகளில் 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்றே ஆண்டாள் குறிக்கப்படுகிறாள்.
* அலங்கரிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆடிப்பூரத் தேரின் உயரம் 75 அடி.