ADDED : ஜூலை 26, 2021 06:32 PM

* வடகிழக்கு (ஈசானம்), தென்மேற்கு(கன்னி) மூலைகள் வழிபாட்டிற்கு உரியவை.
* அகோபிலம் நரசிம்மர் மீது ஸ்ரீராமர் பாடியது பஞ்சாமிர்த ஸ்தோத்திரம்
* அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்த நாள் 'அமாசோமவாரம்' எனப்படும். இந்த நாளில் அரசமரத்தை சுற்றி வர பாவம் தீரும்.
* பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையில், திருமூலர் பாடிய திருமந்திரம் இடம் பெற்றுள்ளது.
* கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம் வரகு.
* சிவபெருமானின் அடியவர்களான நாயன்மார்களின் எண்ணிக்கை 63. இவர்களின் வரலாற்றைக் கூறும் நுால் பெரியபுராணம்.
* விநாயகரால் கொல்லப்பட்ட யானை முக அசுரனின் பெயர் 'கஜமுகாசுரன்'
* காதலாகி கசிந்து சிவபெருமானிடம் கண்ணீர் மல்கிய குழந்தை திருஞானசம்பந்தர்
* மகாவிஷ்ணுவை வழிபட்டு பவுர்ணமியன்று மேற்கொள்ளும் விரதம் சத்திய நாராயண விரதம்.
* மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சங்கு பாஞ்சஜன்யம். சக்கரம் சுதர்சனம்.

