sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 19, 2023 01:23 PM

Google News

ADDED : பிப் 19, 2023 01:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வைணவத்தின் முதன்மைத் தெய்வமாகிய பெருமாளை போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள். இவர்களது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

* பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருமழிசையாழ்வார். இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார்.

* இவர் பெருமாளின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியவர்.

* நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் முதலிய பிரபந்தங்களை அருளியுள்ளார்.

* பக்திசாரர், உறையில் இடாதவர், குடமூக்கிற் பகவர், திருமழிசையார், திருமழிசைபிரான் என இவருக்கு பல பெயர் உண்டு.

* உறையில் இடாதவர் என்றால் வாளினை உறையில் இடாத வீரன் என பொருள். இவருடைய நாக்கு வாள் எனப்படும்.

* பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் பிறந்த இவர், பெருமாள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

* இவர் பெருமாள் மீது வைத்திருக்கும் பக்தியைக் கண்டு, சிவபெருமான் இவருக்கு 'பக்திசாரர்' என்ற பட்டத்தை வழங்கினார்.






      Dinamalar
      Follow us