ADDED : ஏப் 17, 2012 01:36 PM

அ நிறம் | அளவு
1.தசரதபுத்திரர்களில் ஆதிசேஷனின் அவதாரமாக குறிப்பிடப்படுபவர்....
லட்சுமணர்
2. கண்ணில் கண்ட உயிர்களை எல்லாம் குருவாக ஏற்றவர்....
தத்தாத்ரேயர்
3. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றவர்....
திருமூலர்
4. முருகனின் அருளால் கை வளரப் பெற்ற அடியவர்...
முருகம்மையார்
5. விநாயகர் மீது காரியசித்தி மாலை பாடியவர்...
கபிலர்
6.திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தவர்....
குலச்சிறையார்
7. திரிலோக சஞ்சாரி என்று சிறப்புப்பெயர் பெற்றவர்....
நாரதர்
8. பொதிகைமலையில் உற்பத்தியாகும் நதி
தாமிரபரணி
9. ஆண்டவனை அரை நிமிஷமாவது வணங்கச் சொல்லும் அடியவர்...
அருணகிரிநாதர்
10. எமதர்மனின் தங்கையாக கருதப்படும் புனித நதி....
யமுனை
