ADDED : மே 06, 2014 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ஐந்து முக விநாயகரின் பெயர்......
ஹேரம்ப கணபதி
2. மயில் ராவணனை சம்ஹாரம் செய்தவர்.......
பஞ்சமுக ஆஞ்சநேயர்
3. ராமேஸ்வரத்தில் ராமன் தங்கிய மலை........
கந்தமாதன பர்வதம்
4. வாமனரால் கண் இழந்த சுக்கிரன் பார்வை பெற பூஜித்த தலம்.......
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
5. வள்ளலாருக்கு உணவளிக்க வந்த அம்பிகை..........
திருவொற்றியூர் வடிவுடையம்மை
6. ஆனந்தவிமானம் அமைந்திருக்கும் தலம்......
திருப்பதி
7. 'வேயுறு தோளி பங்கன்' என்பதன் பொருள்......
மூங்கில் போன்ற தோள் கொண்ட அம்பிகைபாகன்
8. சனீஸ்வரருக்கு கிரகபதவி அளித்த சிவன்.....
காசி விஸ்வநாதர்
9. குடமூக்கு என்னும் சிவத்தலம் எது தெரியுமா?
கும்பகோணம்
10. லட்சுமி குடியிருக்கும் மத்தகம் என்பது என்ன?
யானைத்தலையின் முன்பகுதி