ADDED : ஜூன் 05, 2014 05:13 PM
அ நிறம் | அளவு
1. லலிதாம்பிகையைச் சுற்றி வீற்றிருப்பவர்கள்........
எட்டு வாக்தேவதைகள்
2. பகவத்கீதையின் வேறு பெயர்கள்.....
ஹரி கீதை, வியாசகீதை
3. புனித தீர்த்தங்களில் நீராடுவதை...... என்பர்.
கிரியா ஸ்நானம்
4. வைராக்யம் என்பதன் பொருள்......
ஆசையற்ற மனநிலை
5. வசிஷ்டர் ராமனுக்கு உபதேசித்த அறிவுரை அடங்கிய நூல்.....
யோக வாசிஷ்டம் (ராமகீதை)
6. கொடிய விலங்குகளை அடக்க உதவும் சித்தி (சித்து)
வாசித்வம்
7. காசியில் குமரகுருபரர் அடக்கிய விலங்கு.....
சிங்கம்
8. சாஸ்திரப்படி உலகிலுள்ள உயிர்களின் எண்ணிக்கை.....
84 லட்சம்
9. கையால் வழங்கும் தீட்சை........
ஹஸ்த மஸ்தக தீட்சை
10. பிநாகம் என்ற வில் யாருக்குரியது?
சிவன்
