ADDED : ஜூலை 29, 2014 04:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. பூமிதேவியின் அம்சமாக பிறந்த ஆழ்வார்.........
ஆண்டாள்
2. மாலை கைங்கர்யத்திற்காக பெரியாழ்வார் அமைத்த இடம்.........
திருப்பூர நந்தவனம்
3. ஸ்ரீவில்லிபுத்தூரின் புராதனப் பெயர்........
செண்பகாரண்யம்
4. ஆண்டாள் வீற்றிருக்கும் சிம்மாசனத்தின் பெயர்.......
கனக சாமர பூபாலனம்
5. ஆண்டாள் மாலையணிந்து அழகு பார்த்த கிணறு......
கண்ணாடி கிணறு
6. பெரியாழ்வார் ஆராதித்து வந்த விக்ரஹம்.....
லட்சுமி நாராயணப் பெருமாள்
7. ஆண்டாள் ஊஞ்சலாடும் மண்டபத்தின் பெயர்......
சுக்கிரவார குறடு
8. பெருமாள் ஆண்டாளை மணம் செய்த நன்னாள்.....
பங்குனி உத்திரம்
9. ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து மகிழ்பவர்....
வடபத்ரசாயி
10. கல்வெட்டுகளில் ஆண்டாள் ......... என குறிக்கப்படுகிறாள்.
சூடிக் கொடுத்த நாச்சியார்