
* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே தர்மங்களில் சிறந்தது.
* கடவுள் அறிவுக் கடலாக உள்ளார். அக்கடலில் நாம் ஒரு நீர்த்துளியாக இருக்கிறோம்.
* அன்பு எதையும் பொறுத்துக் கொள்ளும். அன்பு உள்ள இடத்தில் மகிழ்ச்சியும் இருக்கும்.
* எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். நாம்தான் அதை அறிவதில்லை.
* மனிதன் உண்ண மறந்தாலும், தியானம் செய்ய மறக்க கூடாது.
* மனதை கட்டுப்படுத்துங்கள். அப்படி செய்தால் பல நன்மை உண்டு.
* பயம் இருக்கும் வரையில் நீ அறிவாளியாக முடியாது.
* பள்ளிகள், தொழிற்சாலைகள் அதிகமானால் சிறைச்சாலைகள் குறைந்து விடும்.
* மலர்ந்த முகமும் இனிய சொல்லும்தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி.
* மனதில் லட்சியத்தை பற்றிய ஆழ்ந்த யோசனை எழுந்தால், விரைவில் அதை அடைவாய்.
* உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.
* மனதில் கருணை இருந்தால் மட்டுமே கடவுளின் அருள் கிடைக்கும்.
* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால், வாக்கிலும் அதன் தன்மை வெளிப்படும்.
* நம்பிக்கை காமதேனு போன்றது. அதனிடம் கேட்ட வரம்
அனைத்தும் கிடைக்கும்.
சொல்கிறார் பாரதியார்

