
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே!
ஸங்க ஸக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!!
பொருள்: மகாமாயையாக ஸ்ரீபீடத்தில்
வீற்றிருந்து உலகத்தை பரிபாலிக்கும்
மகாலட்சுமித்தாயே! சங்கு, சக்கரம்,
கதாயுதங்களை ஏந்தியிருப்பவளே! உன்னைப் போற்றி வணங்குகிறேன்.
மனப்பாடப்பகுதி
பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா; எனக்கேல் இனி என் குறை?
வேதநாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.
பொருள்: வேதம் உரைக்கும் அன்பர்கள் போற்றும் திருக்கண்ணபுரத்து எம்பெருமான் உலகிற்கே முதல்வனாக விளங்குகிறான். அப்பெருமானின் திருவடிகளை தினமும் பணிந்திட நோய்நொடிகள் விலகி ஓடும். துன்பம் நேராது. வாழ்வில் ஒரு குறைவும் உண்டாகாது.